Saturday, October 4, 2008

சென்னை வலைபதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.

சென்னை வலைபதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.
சென்னை வலை பதிவர் சந்திப்பு உத்தமர் க்தாந்தி சிலையின் அருகில், விவேகந்தர் இல்லம் அருகில், நடிகர் திலகம் சிவாஜியின் சிலை எதிரில், பாரதியார் உலவிய திருவல்லிகேணி பகுதியில், மிக அருமையாக நடந்து ஏறியது.
பதிவுலக ஜாம்பவான்க்ள மிக விரிவாக பதிவு போடுவார்கள். ஜோடி என் ஒன்றில் இன்று சங்கீத என்ன நிறம் உடையில் வருவார் என்று காண வேண்டிய மிக முக்கிய அலுவல் இருந்ததால் நான் பாதியிலே ஜூட் ஆகி விட்டேன்
அக்டோபர் ௨ ஆம் தேதி புதிய பதிவு தொடக்கி உள்ள ஞானி என்ற ஒரு புதிய பதிவரும் கலந்து கொண்டார். பதிவரோடு பதிவராக எந்த பாகுபாடும் இல்லாமல் பழ்கிய பேசிய ஞானி போற்றுதலுக்கு உரியவர்.
தன்னை பற்றியே அதிகம் செய்திகள் வர வேண்டும் என்று வலை உலகத்தில் நாம் எல்லாரும் விரும்ப - ஞானி அவர்கள், தன்னை பற்றி செய்தி வேண்டாம், தன்னை சிறப்பிக்க வேண்டாம், தானும் ஒரு சக பதிவர் என்று சொல்லி, செய்து காட்டிய எளிமை தான் , காந்தி சிலை அருகில் நாங்கள் கற்ற மிக முக்கிய பாடம்.

2 comments:

Ŝ₤Ω..™ said...

சந்திப்பு மகிழ்வைத் தந்தது.. பதிவு நிறைவைத் தருது..

சந்திப்பு மகிழ்வைத் தந்தது.. பதிவு நிறைவைத் தருது..
நிழற்படங்கள் எனது பதிவில்.. www.sensiblesen.com

மேலும் படங்கள் picasa வில் உள்ளது.. மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்.. email id plzzzzzz

குப்பன்.யாஹூ said...

நன்றி சென் (செந்தில்).
எனது மின்னஞ்சல் kuppan_yah@yahoo.com

முடிந்தால் புகைப்படங்கள் அனுப்பி வைக்கவும்.