Monday, July 6, 2009

தமிழ்நாடு அகதி முகாம்- சாரதா கல்லூரி சேலம்- 30 மாணவிகள்

நேற்று தமிழ்நாட்டு மக்கள் தொலைகாட்சி பார்த்தேன். அதில் ஒரு நேர்காணல். நேரு என்ற இலங்கை தமிழர் (தற்போது வசிப்பது தமிழ்நாடு அகதிகள் முகாம்) பேசிய கருத்துக்கள். அவர் சொல்வது தமிழ்நாடு அரசும், மத்திய அரசும், தனியார் கல்லூரி, பள்ளி களும் அகதிகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். நடிகர் சூர்யா தன சொந்த செலவில் ஆறு சிறுவர்களுக்கு பள்ளி உடை செலவுகளை ஏற்று உள்ளாராம், சீமான், மணிவண்ணன், இல கணேசன் (பா ஜ கா) போன்றோரும் ஏற்று உள்ளனராம். சேலம் சாரதா கல்லூரி (ஆர்ய நிறுவனம், பார்ப்பனீய நிறுவனம்) முப்பது பெண்களுக்கு இலவச உடை, தங்கும் விடுதி, உணவு, கலூரி படிப்பு வழங்குகிறதாம் . நன் சொல்லவருவது வலைபதிவில் தான் நாம் ஆர்யர், புலம் பெயர்ந்த தமிழர் என்று எல்லாம் அடித்து கொள்கிறோம், ஆனால் நிஜ வாழ்வில் எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக உள்ளனர்.