Thursday, November 27, 2008

கடல் புரத்தில் - வண்ண நிலவன்

கடல் புரத்தில் - வண்ண நிலவன்

புத்தகத்தை அளித்த கிழ்க்கு பதிப்பகம், ஹரன் பிரசன்னாவிற்கு நன்றிகள். ஏற்கனவே பதிவர் லேகா இந்த புத்தகம் குறித்து எழுதிய அருமையான விமர்சனம் படித்து இருந்ததால் அதிக எதிர்பார்ப்புடன் படிக்க தொடங்கினேன்.(என் விமர்சனத்தை விட லேகாவின் விமர்சனம் சிறந்ததாக இருக்கும்- http://yalisai.blogspot.com/2008/07/blog-post_22.html).
எதிர்பார்ப்புகள் வீண் போக வில்லை. என் மனதில் உள்ள எதிர்ப்பார்ப்புகளை விட நூறு மடங்கு மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் வண்ண நிலவன். நன்றிகள் பல வண்ண நிலவன் அவர்களே.

அப்படியே வாசிப்பவர்களை உவரி, உடன்குடி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், வீரபாண்டியன் பட்டணம், திருசெந்தூர், புன்னக்காயல், தூத்துக்குடி, நாசரேத், இடிந்தகரை, ஊருக்கே தூக்கி கொண்டு போய் விடுகிறார்.என் உயர் பள்ளி கல்வியை ஆத்தூரில் படித்ததால் மீனவ நண்பர்கள் அதிகம் (அருகில்தான் புன்னக்காயல், பழையகாயல்).

கதையில் வரும் பிலோமி என் அக்காவுடன் படித்த புன்னக்காயல் சகாயராணி அக்காவை நினைவு படுத்தி கொண்டே இருந்தார். (இந்த பதிவு எழுதும் போது கூட கண்ணீர் மல்குகிறது).

பிலோமியின் அண்ணன் ஸெபஸ்தி, என்னுடன் படித்த டெய்சி செல்வராணி யின் அண்ணன் தாமஸ் பெர்னாண்டோவை நினவு படுத்தினார். கதையை இரவு படித்து விட்டு (பத்து மணி இருக்கும்) படுக்கையில் படித்தால் தூக்கமே வர வில்லை இரண்டு மணி நேரத்திற்கு.நினவு அலைகள் எங்கு எங்கோ சென்றன.

இது உண்மை கதையா அல்லது கற்பனை கதையா என்று பட்டி மன்றமே நடத்தலாம். வண்ண நிலவன் அந்த அளவு சிறப்பாக எழுதி உள்ளார்.
மீன் பரவர்கள் மேல் எப்போதுமே எனக்கு, என் குடுமபத்தார்க்கு மிகுந்த அன்பு, மரியாதை உண்டு., அடி மனதில் ஒற்றுமை, பரந்த மனப்பான்மை, அடுத்தவர் முன்னேறுவது கண்டு ஆனந்த படுதல் போன்ற நல்ல குணங்கள் உள்ள மனிதர்கள்.

கதையின் போக்கு , கதை முடிவு குறித்து நான் எழுத விரும்ப வில்லை, படிப்பவர்களுக்கு பிலோமியின் காதல் முடிவு என்ன ஆகும் என்ற பரபரப்பு இருக்கட்டும் என்பது என் ஆசை.

சிறந்த வரிகள் பல இருக்கின்றன:"தூரத்திலே கடல் இரைகிறது. யாரோ ஒரு பெண் தன் பாடுகள் தீராமல் புலம்பி கொண்டிருக்கிறது போல கேட்டது."
முதலில் குறிக்க தொடங்கினேன்., எழுத்து என்னை விழுங்கத் தொடங்கியதும் குறிப்பதை நிறுத்தி விட்டேன்.

பிலோமி ரஞ்சி யின் உரையாடல்கள் மிக அருமை. ஐசக், பவுலு, சாமிதாஸ் போன்றோர் எல்லா கடல் புறத்து கிராமங்களிலும் இருக்கின்றனர்.
இந்த கதை தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோயில் கடல் புறத்தில் நடந்தது போல இருந்தாலும் , இவை போன்ற நிகழ்வுகள் எல்லா கடலோர மாவட்டங்களிலும் நடப்பவை.

ஒரு நல்ல தமிழ் சினிமா (மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, வெயில், பாசமலர், பராசக்தி, anjali ) மனதில் ஏற்படுத்திய தொந்தரவை வண்ண நிலவன் ஏற்படுத்தி உள்ளார். திரைப்படங்களுடன் புத்தகங்களை ஒப்பீடு செய்தல் தவறுதான், மற்ற புத்தகங்களோடு ஒப்பீடு செய்து வீண் வம்புகள் உருவாக்க வேண்டாம் என்று கருதுவதால் என்னை மன்னிப்பீர்களாக

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்களேன்.

Saturday, November 22, 2008

சன் டி வி, தினகரனால் தான் திமுக ஆட்சி - காமெடி

சன் டி வி, தினகரனால் தான் திமுக ஆட்சி - காமெடி

மாறன் சகோதரரக்ள் அறிக்கை, கடிதம் படித்தால் சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வராது. கலாநிதி சொல்கிறார், திமுக ஆட்சியே சண் டி வி , தினகரன் (பழைய கே பி கந்தசாமி அய்யா தினகரன் அல்ல) ஆகியவற்றால் தான் கிடைத்ததாம். ஆனால் கலைஞர்க்கு நன்றி கடன் இல்லையாம், தயாநிதி மாறனை பதவியை விட்டு தூக்கி விட்டாராம்.

திமுக வில் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத தயாநிதி மாறனுக்கு எம் பி தகுதி எங்கிருந்து வந்தது. கலைஞரின் பேரனாக இல்லாவிடில், ஒரு திமுக வட்ட பிரதிநிதி, தயாநிதிக்காக தேர்தலில் உழைதிருப்பாரா.

பொதுக்குழு, செயற்குழு, ஒன்றிய கழக தேர்தல் இது பற்றி எல்லாம் ஏதும் தெர்யுமா தயாநிதிக்கும், கலாநிதிக்கும்.

காலம் சென்ற முரசொலி மாறனுக்கே தெரியாதே அந்த அளவு. எத்தனை பொதுக்குழு கூட்டங்கள், மாநாடுகளில் மாறன் பேசும் பொது, உடன்பிறப்புகள் எந்த அளவு புலம்பி நொந்து போவார்கள் என்பது நாடு அறிந்த செய்தி.

கலைஞரின் உறவினர் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்தே முரசொலி மாறனுக்கு மந்திரி பதவி தரப் பட்டது, (விடுதலை விரும்பி, வைகோ, முகமது சகி, எல் கணேசன், குப்புசாமி, மிசா கணேசன், போன்றோர் எல்லாம் இருந்த போதும்)

உண்மையாக கட்சிக்கு உழைத்த தொண்டர்களை விட்டு விட்டு, உறவை பார்த்து பதவி வழஅங்கியது கலைஞர் செய்த மிகப் பெரிய தப்பு, அதற்கான தண்டனை இப்போது கிடைத்து விட்டது.

இங்கே பேராசிரியரின் அனுபவத்தை, பண்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும், அவர்தான் கலைஞரிடம் சொன்னாரம், ஏதோ சின்ன பசங்க,செங்கல்பட்ட தாண்டி தமிழ்நாடுன்னா என்ன என்று தெரியாத பசங்க, பாவம் விட்ருங்க.

Thursday, November 20, 2008

வாசித்தோம் வளர்ந்தோம் -படித்து கிழித்தவை

லேகா விற்கு நன்றி ( யாழிசை )வாசிப்பு குறித்த தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு.

என் முதல் வாசிப்பு தினமணி, தினமலர், தினத்தந்தி (எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்புகளில்). அப்பொழுது தெருக்களில் நண்பர்களிடம் சினிமா சம்பந்தாமான செய்திகள் யார் முதலில் சொல்வது, படித்து என்று பெரிய போட்டி, கர்வம் இருக்கும்.

பத்தாம் வகுப்பில் சுத்தமாக வாசிக்க வில்லை. அதுவும் எட்டயபுரத்தில் இருந்து கொண்டு. ஒருவேளை அந்த மண்ணையே படித்தேன் போல.
பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பின் பொழுது சினிமா எக்ஸ்பிரஸ், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் , தினமலர், மாலை முரசு, குங்குமம், தினமலர் என்று முன்னேற்றம். அதிகமாக சினிமா செய்திகள் தான்.

ஐந்தாம் வகுப்பின் பொழுது விபரமே புரியாமல் வாசித்தவை விஷ்ணு ஸஹஸ்ரநமாம், அபிராமி அந்தாதி போன்றவை. பன்னிரண்டாம் வகுப்பில் மீண்டும் விபரமே புரியாமல், ருத்ரம், சமகம், தேவராம் ...

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் தினமும் நூலகம் செல்வேன். (நன்றி -நெல்லை நகரம், எங்கள் தெரு சக மாணவர்கள் ) ஹிந்து, எக்ஸ்ப்றேச்சில் உள்ளே நுழைய ஆரம்பித்தேன். ஹிந்துவில் மாநிலம் செய்திகள் மட்டுமே லேசாக புர்யும்.

பீ காம் சேர்ந்த வுடன் மாற்றம் வந்தது. தீப்பொறி ஆறுமுகம், விடுதலை விரும்பி, வைகோ , காளிமுத்து போன்றவர்களின் மேடை பேச்சு கேட்க்க தொடங்கிய நேரம், தீப்பொறி ஆறுமுகம் சொன்ன ஒரு செய்தி, தினமும் பன்னிரண்டு நாளிதழ் படிப்பேன்,எட்டு வார இதழ்க படிப்பேன் என்றார். கல்லூரி நூலகத்தில் ஹிந்து, எக்ஸ்பிரஸ், கோம்பெடிடின் success, கோம்பெடிடின் ரெவிஎவ், சப்பான், இந்தியா டுடே, த வீக், பிசினஸ் இந்தியா, ஜூனியர் போஸ்ட் எல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன்.

வைகோவின் அடுக்கு மொழி , எதுகை மோனை பேச்சு கலைஞர், அண்ணாவை படிக்க தூண்டியது. மதுரை டிக்டா ரவி, காவேரி மணியம், புதூர் பூமிநாதன் நட்பு, மதுரை அரசியல் சுவர் விளம்பரங்கள் (ஓய்வறியா உதயசூரியன், முத்தாரமே முரசொலிக்க வாராய்..) வாசிக்கும் ஆர்வாதை தீவிரப் படுத்தியது. கலைஞர், அண்ணாவின் படைப்புக்கள் பெருமளவு வாசித்தேன்.(சுவைத்தேன்). அப்பொழுது மண்டல கமிசன், வீ பி சிங்க் போராட்டம் போன்றவை தீவிரமாக இருந்த காலம்.

முரசொலி, தினகரன் (கே பி கந்தசாமி கால) படித்தேன், அதை தொடர்பு படுத்த மீண்டும் தினமணி. அப்போது மாலன் ஆசிரியர் (நான் மாலனுக்கு என்றென்றும் கடமை பட்டுளேன்). மாலன் மூலம் சுதாங்கன் , சுப்ரமண்ய ராசு, பாலகுமாரன் பெயர்கள் அறிமுகம். தினமணி கதிரில் பாலகுமாரன் கல்யாண ரதம் / கனவு எழுதினார். அங்கிருந்து பாலகுமாரன் தொடக்கம். மூன்று மாத காலத்திற்குள் ௮0 பாலகுமாரன் புத்தகம் படித்து இருப்பேன். (மெர்குரி பூக்கள், மணல் நதி, இனிது இனிது காதல் இனிது, என்றென்றும் அன்புடன், கரையோர முதலைகள், தாயுமானவன், கனவுகள் விற்பவன், இதற்காகத்தான் ஆசைப்பட்டயா ...)

பாலகுமாரன் மனசு, சுஜாதா, வாஸந்தி பற்றி எழுதி இருந்தார்.
நெல்லை கோவிலுக்கு சுஜாதா வந்தார், (கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு என நினைக்கிறேன், சுஜாதாவிடம் ஒரு விடலை பய்யனாக நான் கெட்ட கேள்வி 'சார் மனசு உடம்பில் எங்கு இருக்கிறது. சுஜாதா ஜூனியர் போஸ்ட் ஓர் ஏன் எதற்கு எப்படி யில் இதை பற்றி எழுதிய ஞாபகம். சுஜாதாவின் அந்த வரிகளை படித்ததும் எனக்கு கை கால் புரியவில்லை.
அடுத்த நாளே பாளையம்கோட்டை மத்திய நூலகம் சென்று சுஜாதாவின் கதைகள் படிக்க துவங்கினேன். நிறைவான நகரம், கொலை உதிர் காலம், விக்ரம், கனவு தொழிற்சாலை...

அதில் இருந்து வாஸந்தி, மாலன், வண்ண நிலவன், தி க சி, கல்யாண்ஜி, பாமரன், தி ஜா, எல்லாம் படித்தேன். அப்பொழுது தமிழ் எழுத்து உலகம், எழுத்தாளர் வாழ்க்கை முறை எல்லாம் புரி பட தொடங்கியது.

பின்பு அதமதாபாத் இந்திய மேலாண்மை கல்லூரி போனதும் ஆங்கிலப் புத்தகம் அறிமுகம் ஆனது, ஜாக் வால்ஷ்...
பின்பு வெளிநாட்டு வேலை, ப்ரோஜக்ட் போனதும் மீண்டும் தமிழ் புத்தகம், வண்ண நிலவன், பிரபஞ்சன், ஜெயகாந்தன், ஜெய மோகன், நாஞ்சில் நாடன், சல்மா, கனிமொழி அக்கா, சமுத்ரம், சுப வீ, பொன்னீலன், சுப மங்கள, கலைமகள்.. விகடன் மூலம் எஸ் ராமக்ரிஷ்ணன் அறிமுகம்.

பின்பு சென்னை வந்ததும் கம்பர், பாரதி, தேவாரம், திவ்ய பிரபந்தம், பாமரன், கோணங்கி, திலகவதி என்று எல்லாரும்.

திரும்ப விவரம் அர்த்தம் புரிந்து விஷ்ணு சகாச்ரனாமம், ருத்ரம், உபன்யாசம் (ராமகிருஷ்ண மடம் வெளியீடு).

இணையம் வந்த பிறகு புத்தக வாசிப்பு பெருமளவு குறைந்தது. யாஹூ, ரெடிப்ப், பால்டழ்க் yahoo. rediff, paltalk, ஹிச்சட்டேர்ன சாட்டில் மனிதர்களை படிக்க தொடங்கியது. அப்புறம் வலை பதிவு வாசித்தல் (காயத்ரி பாலை திணை, லேகா, டுபுக்கு, மாமி, இலவச கொத்தனார், ஈழ வலைபதிவர்...)

என்னுடைய பரிந்துரைகள்:
சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (எல்லா பகுதிகளும்)
பாலகுமாரனின் மணல் நதி
எஸ் ராமகிருஷ்ணனின் அலைவோம் திரிவோம், கதா விலாசம்.
jack walsh - winning, straight from த gut
stephen covey- seven habits of highly effective people, first in பிரஸ்ட்
peter drucker = daily druckerThe definitive ட்ருச்கேர்
by Elizabeth Hass ஏடெர்ஸ்ஹெஇம்
The Toyota way, The Mickency mind, Knowing doing gap.

டுபுக்கு, பாலை திணை, யாழிசை, மாமி வலை பதிவுகள்.

எழுதுவதை விட வாசித்தாலே ஆசையாக விருப்பமாக இருக்கிறது.

இளையராசாவின் இசை , கமலின் நடிப்பு, வைகோவின் மேடை பேச்சு போல வாசிப்பும் என்றும் அலுப்பதில்லை.


நான் அழைப்பது காயத்ரி paalai திணை மற்றும் அனைத்து பதிவர்களையும்.

Saturday, November 15, 2008

கழக ஆட்சியும் தேவர் தேவேந்திரர் சண்டையும்

கழக ஆட்சியும் தேவர் தேவேந்திரர் சண்டையும்
இதற்கு முன்பு நடந்த கழக ஆட்சியில் தென் தமிழ்கத்தில் ஜாதி மோதல் ஏற்பட்டது. அப்பொழுது மூப்பனாரின் அறிவுரை படி மாவட்டங்கள், அரசு போக்குவரத்து கழகங்கள் பெயர் மாற்றம் செய்ய பட்டது.
இன்றைய ஆட்சியிலும் மீண்டும் அதே ஜாதி சண்டை. இப்பொழுது கல்லூரி பெயர்களும் மற்ற படுமோ. சமத்துவ கல்லூரிகள் தொடங்கலாம்.
அன்று தங்க பாண்டியன், பொன் முத்து, ச தங்கவேலு, வைகோ , பசும்பொன் தா கிரிடிணன் இருந்தார்கள்,

இணைய தள காலத்திலும் சாதியத்தை பாதுகாத்து வரும் ஒரே சமூகம் நம் தமிழ் சமூகம் தான்.

Friday, November 14, 2008

சன் டி வி- நள்ளிரவு கைது கொல்றாங்களே - இன்று சட்ட கல்லூரி காட்சிகள்

சன் டி வி- நள்ளிரவு கைது கொல்றாங்களே - இன்று சட்ட கல்லூரி காட்சிகள்
அன்று சன் டி வி யில் 1000 முறை ஒலி/ஒளி பரப்பினார்கள்:
இனிமேல் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது.
நள்ளிரவு கைது- ஐயோ கொல்றாங்களே
அன்று தாத்தாவும், அப்பாவும் சொல்லி கொடுத்தார்கள் 1000 முறை ஒளி பரப்ப சொல்லி.
இன்று பேரன் கள் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, என்பது போல சட்ட கல்லூரி வன்முறையை 10000 முறை காட்டினார்கள்.
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.
குப்பன்_யாஹூ

Thursday, November 13, 2008

சட்ட கல்லூரி ஜாதீய அரசியல் வன்முறை

சட்ட கல்லூரி ஜாதீய அரசியல் வன்முறை
நானும் மேபோக்காக இது ஏதோ மாணவர்களின் இரு பிரிவினர்க்கு இடையே நடந்த வன்முறை என்றுதான் நினைத்தேன்.
செய்தியாளர்களிடம் பேசிய பிறகுதான் தெரிகிறது, இது இரு வேறு ஜாதியை சார்ந்த அமைச்சர்களின் உறவினர் மாணவர்களுக்கு இடையே நடந்த வன்முறை என்று.
ஒகேனக்கல், முல்லை பெரியார், தமிழ் ஈழம் போல இந்த பிரச்சனையும் சுமூகமாக தீர்ந்து விடும்.
வாரணம் ஆயிரம், தெனாவட்டு வந்ததும் இந்த பிரச்னை எங்களுக்கு மறந்து விடும்.
வீடயோ காட்சி காண இங்கே செல்லுங்கள்.

http://in.youtube.com/watch?v=d5AsWevkj1A

மின்கட்டணம் இணையத்தளத்தில் அறியலாம்.

மின் கட்டணம் இணையத்தளம் மூலமாக அறியலாம், செலுத்தலாம்.
தமிழ் நாட்டில் வசிப்பவர்கள் இணையத்தளம் மூலம் மின் கட்டணம் அறியலாம், செலுத்தலாம்.
விபரங்கள் கீழே:
http://www.tnebnet.org/newlt/menu2.html

http://www.tnebnet.org/awp/TNEB/

மின் அட்டையில் உள்ள என் அறிந்திருக்க வேண்டும்.

Thursday, November 6, 2008

ஆம் நம்மால் முடியும் - தமிழக ஒபாமா வைகோ விடுதலை.

ஆம் நம்மால் முடியும் - தமிழக ஒபாமா வைகோ விடுதலை.
ஆம் வைகோ திரும்பவும் புடம் போட்ட தங்கம் போல வெளி வந்து உள்ளார். தேவையற்ற இந்த கைடிதினால் மக்களின் வரிப்பணம் தான் விரயம். கழக ஆட்சியின் இன்னொரு அந்தர் பல்டி இது.

தன்னம்பிக்கை ஊட்டும் வைகோ எழுதிய ஆம் நம்மால் முடியும் புத்தகம் முடிந்தால் படியுங்கள்

Sunday, October 26, 2008

மான் ஆட மயில் ஆட- ஆங்கில பாடல் நடனம்- தமிழ் பற்று வாழ்க.

நேற்று மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சி இறுதி நிகழ்ச்சி நடந்தது. அதில் நடனம் ஆடிய பத்து பாடல்களில் எட்டு பாடல்கள் ஆங்கில பாப் பாடல்கள். இதுதான் கழகத்தின் தமிழ் பற்றா.

நல்ல வேளை அண்ணா நீங்கள் உயிரோடு இல்லை, இந்த ஆட்டங்களை பார்த்திருந்தால் காங்கிரசிலேயே போய் சேர்ந்து இருப்பீர்கள்.
இனமான பேராசிரியர் எப்படித்தான் இதை பொறுத்து கொண்டு இருக்கிறாரோ, வாழ்க நீர் எம்மான்.

இதுவரை விடலைகளின் ரிகார்ட் டான்ஸ் நடந்தது. அடுத்து மான் ஆட மயில் ஆல் மூன்றாம் பாகம் நிகழ்ச்சி ஆரம்பம், அதில் சிறு குழ்ந்தைகளின் அரைகுறை உடை நடனம் அரங்கேறப் போகிறதாம்.

அங்கே தொப்புள் கொடி உறவை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கிறது, இங்கே நாம் தொப்புளை யார் அழகாக சின்ன திரையில் காட்டுவது என்பதில் போட்டி நடத்துவோம். வாழ்க நம் தமிழ் பற்று, தமிழ் சேவை.

Saturday, October 25, 2008

வைகோ, சீமான், அமீர் கைது - தந்தி அடிப்போம் வாருங்கள்

வைகோ, மு கண்ணப்பன், சீமான், அமீர் விடுதலை குறித்து தந்தி அடிக்கலாமா அல்லது sms அடிக்கலாமா. சுப வீரபாண்டியனும் , கி வீரமனயும் தான் விடை சொல்ல வேண்டும்.

அல்லது மனித சங்கிலி அமைப்போமா. கோபாலபுரத்தில் இருந்து புழழ் வரை மனித சங்கிலி அமைப்போமா.

புலம் பெயர்ந்த தமிழ்ர்களே சொல்லுங்கள்.

குப்பன்_யாஹூ

Friday, October 24, 2008

வைகோ கைதும் பீட்டர் அல்போன்ஸின் மந்திரி கனவும்

வைகோ கைது நடவடிக்கையால் பயன் பெற்றோர் , வீண் அடைந்தோர் பட்டியல்:

வைகோ- பயன் பதினைந்து நாட்கள் நிறைய புத்தகங்கள் படிக்கலாம், ஓய்வு எடுக்கலாம்.வாலிபால் விளையாடலாம்.

கலைஞர்- பயன். அழகிரி, ஸ்டாலின் பிரசினையில் இருந்து சற்று ஓய்வு.

ஜெயலலிதா- பயன் அறிக்கை விட ஒரு பிரச்சனை கிடைத்தது

பீட்டர் அல்போன்ஸ், சுதர்சனம் - கொனஜ்ம் நம்பிக்கையுடன் இருந்த மந்திரி பதவி காலி. இனிமேல் காமராஜர் வந்துதான் மந்திரி பதவி தர வேண்டும்.

வலைபதிவர்கள்- பதிவு போட அருமையான தலைப்பு சிக்கி உள்ளது.

Thursday, October 23, 2008

ஈழத் தமிழர்களுக்கு கலைஞரின் தீபாவளி பரிசு - வைகோ .

ஈழத் தமிழர்களுக்கு கலைஞரின் தீபாவளி பரிசு - வைகோ .

ஈழத் தமிழ்ர்களை ஆதரித்து வைகோ பேசியதற்கு கைது. இது பற்றி நாம் பேசுவதை விட திராவிடர் கழக தலைவர் வீரமணி, சுப வீரபாண்டியன், பழ நெடுமாறன் கருத்து கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்.

ஞானியின் ஒ பக்கங்களில் இதை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

குப்பன்_யாஹூ

கலைஞரின் தமிழ் உணர்வு - வெளிச்சம் - வைகோ கைது

கலைஞரின் தமிழ் உணர்வு - வெளிச்சம் - வைகோ கைது

கலைஞரின் சுய ரூபம் தெரிந்து விட்டது. திராவிட தலைவரின் தமிழ் உணர்வு வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. சோனியா அம்மையாரை திருப்தி படுத்த கலைஞர் வைகோ மற்றும் கண்ணப்பன் ஐ கைது செய்து உள்ளார்.

புலம் பெயர்ந்த தமிழ்ர்களே இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். கலைஞரும் ஆற்காடு வீரா சாமி உம் மின் வெட்டு பிரச்சனையை மறக்க வைக்கவே இலங்கை தமிழார் பிரச்சனை நாடகம் ஆடினார்.

தமிழ் தலைவர் வீரமணி என்ன கருத்து சொல்கிறார் இது பற்றி.?

பிரபாகரனுக்கு ஒரு கருணா. தமிழ்ர்களுக்கு ஒரு ?

வலை பதிவர்கள் நாளை முதல் வைகோ கைதிற்கு கண்டனம் தெரிவித்து பதிவுகளை முடுக்கி விடுங்கள்.

குப்பன்_யாஹூ

ஆற்காடு வீராசாமிக்கு ஆறுதல் தந்த இலங்கை தமிழர் பிரச்சினை

ஆற்காடு வீராசாமிக்கு ஆறுதல் தந்த இலங்கை தமிழர் பிரச்சினை
ஆற்காடு வீராசாமி உம் , கலைஞர் கருணாநிதி உம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேக்கு நன்றி கடன் பட்டவர்கள். வேலுப்பிள்ளை பிரபகாரனுக்கும கூட.
மின் வெட்டு பிரச்சனை யை திசை திருப்ப ஒரு ரூபாய் அரிசி கூட உதவ வில்லை.
ஆபத் பாந்தவனாக வந்து உதவியது இலங்கை தமிழர் பிரச்சனை. இப்போது மக்கள் சற்று மறந்து இருக்கிறார்கள் மின் வெட்டை. அதுவும் ௨௪ ஆம் தேதி பகலில் மனித சங்கிலி வைத்தது கலைஞரின் புத்திசாலித்தனம்.
குப்பன்_யாஹூ

Friday, October 17, 2008

விகடன் தீபாவளி மலர் 2008- வாங்கி படியுங்கள் அனைவரும்

விகடன் தீபாவளி மலர் - வாங்கி படியுங்கள் அனைவரும்.

ஆனந்த விகடன் தீபாவளி மலர் வந்து விட்டது. வாங்கி படியுங்கள். மனுஷ்ய புத்திரன் கட்டுரை, சுஜாதா சிறுகதை, கனிமொழி அக்கா நேர்காணல், பாடலாசிரியர் தாமரை சிறுகதை....

வலைபதிவர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

மனுஷ்யபுத்திரன் சொல்வது போல சுஜாதா எழுத்து இல்லாத தீபாவளி மலர் இது.

தாமரையின் சாமியார் சிறுகதை அருமை.

குப்பன்_யாஹூ

Friday, October 10, 2008

102 முறை வாசித்த பதிவு

102முறை வாசித்த பதிவு
நான் இந்த பதிவை 102முறையேனும் வாசித்திருப்பேன்., இன்னமும் ஆர்வம் குறையவில்லை, சலிக்க வில்லை:

எழுத்துக்களிலேயே உணர்வுகளை நாம் உணரலாம். அந்த பதிவரின் பதிவை அப்படியே காப்பி செய்து பதித்துள்ளேன். இதை சொல்வதில் எந்த வித தயக்கமும் வெக்கமும் இல்லை:

"புத்தகங்களை விட்டு விலகி மனிதர்களைப் படிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து கூடவே எச்சரிக்கை உணர்வொன்றும் நிரந்தரமாய்த் தங்கி விட்டது மனதில். அன்பும் அக்கறையுமாய் உள்ளில் ஆழப்பதியும் மனிதர்கள் பிரிவென்னும் பெயரால் உறவை வேரோடு பிடுங்கிப் போகையில் மண் சரிவைப் போன்றே மனமும் சரிந்து போக நேரிடுகிறது. எவரேனும் அன்பு சொல்லி அருகில் வந்தால் பயமாயிருக்கிறது. "எவரின் அன்பையும் ஏற்பதுமில்லை நிராகரிப்பதுமில்லை" என்று பொதுவிதியொன்றைப் புனைந்து கொண்டு இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாலும் சுவர்களில் கசிந்தூறும் மழை நீராய், எவருடைய அதீத அன்பினாலோ, எதிர்நோக்கங்கள் அற்ற அக்கறையினாலோ எப்போதாவது இறுக்கங்கள் தளர்ந்து மனதின் ஊற்றுக்கண்களில் அன்பு கசியத் தொடங்கி விடுகிறது.
அன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது. பிரிவு, துயர், நிராகரிப்பு, வலியென கண்ணீர் சுமந்த கவிதைகளையே அதிகம் பதிவித்து வரும் நான் இடையிடையே லேசாய்ச் சிரிக்கவும் வைத்திருப்பேன். அது தான் அவளை என்னிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். பதிவிடத் தொடங்கிய என் ஆரம்ப நாட்களில், எவரும் என்னை கவனத்தில் கொண்டிராத தினங்களிலிருந்தே என் பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு வந்த அவள், முதன் முதலாய் என் சோகப்பதிவு தொடர்பாய் மடல் ஒன்று அனுப்பியிருந்தாள்.
"உன் வரிகள் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. என்ன சோகம்னு நீ என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்னு கட்டாயமில்ல. ஆனா யார்கிட்டயாச்சும் சொல்லனும்னு நீ விரும்பினா U can count on me ன்னு சொல்லத்தான் இதை எழுதினேன்"
என்று சொல்லப்பட்டிருந்தது அதில்! அந்த கடிதம் கொண்டு வந்த அன்பு, வார்த்தைகளில் இருந்த ஆறுதல், அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டிப் பார்க்க விரும்பாத இங்கிதம், 'நானிருக்கிறேன் உனக்கு' என்ற நம்பிக்கை எல்லாம் சேர்ந்து எதிர்பாராமல் என்னை ஆக்கிரமிக்க, முகமறியாத அந்த பிரியத்தின் நெகிழ்வில் லேசாய் கண்ணீர் துளிர்த்தது.
அதன் பின்.. முதன் முதலாய் என் பிறந்தநாளன்று பேசத் துவங்கினாள். வாழ்த்தினாள்.. நலம் விசாரித்தாள்...என் கவிதைகளை சிலாகித்தாள்.. கேலியாய் விமர்சித்தாள்.. தினமும் பேசியே இம்சித்தாள்... பேசாத நாட்களில் 'எங்கே போனாளென' கவலையாய் யோசிக்க வைத்தாள்..
இத்தனையும் செய்த அவள்... அழகான ராட்சசி...
என் இனிய ஜி3!

இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறாள்!!
கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பரிவு, கொஞ்சம் பொறுப்பு.. நிறைய்ய்ய குறும்புகள்.. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட அற்புதமான பெண் அவள்! அவளை நான் எத்தனை நேசிக்கிறேன் என்பதை இதுவரை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை நானும் சொன்னதில்லை. ஆயினும் என்ன? என் அன்பைச் சொல்ல இன்றைய தினம் நிச்சயம் பொருத்தமாயிருக்கக் கூடும்."
http://gayatri8782.blogspot.com/2007/09/blog-post.html

Saturday, October 4, 2008

சென்னை வலைபதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.

சென்னை வலைபதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.
சென்னை வலை பதிவர் சந்திப்பு உத்தமர் க்தாந்தி சிலையின் அருகில், விவேகந்தர் இல்லம் அருகில், நடிகர் திலகம் சிவாஜியின் சிலை எதிரில், பாரதியார் உலவிய திருவல்லிகேணி பகுதியில், மிக அருமையாக நடந்து ஏறியது.
பதிவுலக ஜாம்பவான்க்ள மிக விரிவாக பதிவு போடுவார்கள். ஜோடி என் ஒன்றில் இன்று சங்கீத என்ன நிறம் உடையில் வருவார் என்று காண வேண்டிய மிக முக்கிய அலுவல் இருந்ததால் நான் பாதியிலே ஜூட் ஆகி விட்டேன்
அக்டோபர் ௨ ஆம் தேதி புதிய பதிவு தொடக்கி உள்ள ஞானி என்ற ஒரு புதிய பதிவரும் கலந்து கொண்டார். பதிவரோடு பதிவராக எந்த பாகுபாடும் இல்லாமல் பழ்கிய பேசிய ஞானி போற்றுதலுக்கு உரியவர்.
தன்னை பற்றியே அதிகம் செய்திகள் வர வேண்டும் என்று வலை உலகத்தில் நாம் எல்லாரும் விரும்ப - ஞானி அவர்கள், தன்னை பற்றி செய்தி வேண்டாம், தன்னை சிறப்பிக்க வேண்டாம், தானும் ஒரு சக பதிவர் என்று சொல்லி, செய்து காட்டிய எளிமை தான் , காந்தி சிலை அருகில் நாங்கள் கற்ற மிக முக்கிய பாடம்.

Thursday, October 2, 2008

பட்டி மன்றம்= கோஷ்டிகள் அதிகம் காங்கிரசிலா அல்லது வலை பதிவர்களிடமா

பட்டி மன்றம்= கோஷ்டிகள் அதிகம் காங்கிரசிலா அல்லது வலை பதிவர்களிடமா
எனக்கும் மற்றொரு பதிவாலர்க்கும் இடையே தீராத விவாதம். நான் சொல்வது தமிழ் நாடு காங்கிரஸ் காட்சியில் தான் கோஷ்டிகள் அதிகம் என்று.
ஆனால், அவர் புள்ளி விவரங்களோடு வாதிடுகிறார் தமிழ் வலை பதிவாளர்கள் மத்தியில்தான் அதிக கோஷ்டிகள் என்று.
நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த மிக முக்கியமான விவாதத்தை முடித்து வைக்க வேண்டுகிறேன்
அனபன் குப்பன்_யாஹூ

Wednesday, October 1, 2008

அமெரிக்க பெயில் அவுட்டும் ஆதம்பாக்கம் வீட்டு வாடகை அவுட்டும்

அமெரிக்க பெயில் அவுட்டும் ஆதம்பாக்கம் வீட்டு வாடகை அவுட்டும்
அமெரிக்கா பெயில் அவுட் வெற்றி பெறும் என்று பெரிதும் நம்பினாள் எனது அதை மகள் அகிலா..
ஆக்செஞ்சரில் அலுவல் பார்க்கும் அவளின் கவலை அக்டோபெர் முதல் சம்பளம் 64ஆயிரம் இல் இருந்து எழுபத்தி எழு aayirm ஆக வேண்டும் என்று.
இது போதாது என்று ஆஸ்திரேலியா வில் இருக்கும் அவள் அண்ணன் கட்டி உள்ள ஆதம் பாக்கம் அடுக்கு மடி குடிஇருப்பின் வாடகையை அதிகரிக்கலாம் என்று ஆசை பட்டாள். அதிலும் மண் விழுந்தது.
ஆறாம் வகுப்பு படித்த ஆறுமுகம் என்ற வீட்டு வாடகை தரகர் கூட சொல்கிறார், அம்மா அமெரிக்கா பொருளாதாரம் அவுட், நம்ம ஊரிலும் சம்பளம் கட்டு, எனவே அதிக வாடகை இனிமேல் எதிர்பார்க்காதீர்கள் என்று.
அகிலா வோடு சேர்ந்து ஆறுமுகம், முனுசாமி வகையறாக்களும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்த போகிறார்கள், ஒபாமா சீக்கிரம் பதவி ஏற்க வேண்டும் என்று.

நவராத்ரி கொலு ஏன் பார்பனர் வீடுகளோடு நின்று விடுகிறது.

நவராத்ரி கொலு ஏன் பார்பனர் வீடுகளோடு நின்று விடுகிறது.
நவராத்ரி கொலு என்பது மிக உன்னதமான நிகழ்வு , பண்பாடு, செயல், பண்டிகை.
தெருவில் உள்ள அனைத்து வீட்டு உறுப்பினர்களும் ஒருவருக்கு ஒருவர் நட்பு, அன்பு பரஸ்பரம் பாராட்ட மிகவும் உதவியாக உள்ள நிகழ்வு.
அனைத்து குழஅந்தைகளும் தங்களிடம் உள்ள பாட்டு, நடனம், பேச்சு திறமைகளை வெளி கொணர மிக சிறந்த சந்தர்ப்பம். இது நடந்தால் நாம் டி வி யில் ஜோடி நொ௧, சூப்பர் சிங்கர் ஐ சம்ஸ் மூலம் தேட வேண்டாம்.
இந்த நிகழ்வு ஏன் பார்ப்பன வீடுகளோடு நின்று விடுகிறது. அனைத்து சாதி மக்களும் கொண்டாடி மகிழழாமெ தமிழஅகத்தில்.

Saturday, September 27, 2008

விஜய் டிவி தந்த விஜயன் - தமிழ் எங்கள் மூச்சு

விஜய் டிவி தந்த விஜயன் - தமிழ் எங்கள் மூச்சு
விஜய் டிவி தரும் மற்றும் ஒரு நல்ல நிகழ்ச்சி தமிழ் எங்கள் பேச்சு மூச்சு. (போட்டி மனப்பான்மையை உருவாக்கும் நிகழ்ச்சிதான், ) இருந்தாலும் சகோதரர் விஜய் தன் பேச்சு திறனால் அந்த குறை யை மறக்க செய்கிறார்.
விஜயன் இன் பேச்சை கண்டு நான் வார வாரம வியாய்க்கிறேன், மகிழ்கிறேன், பாராட்டுகிறேன்.
விஜயன் கடுமையாக உழைக்கிறார், தன்னிகரில்லா மனிதர் வைகோ வின் சாயலில் பேசும் பாங்கு, கருத்துக்கள், உடல் அசைவு அனைத்தும் அருமை.
விஜயனை பாராட்டி தட்டி கொடுத்து சிறப்பிக்கும் நெல்லை கண்ணன், சுப வீ, ராசா, அவ்வை நடராஜன் ஆகியோருக்கும் நன்றி.
தம்பி விஜயனுக்கு இதயம் .கனிந்த வாழ்த்துக்கள்

Monday, September 22, 2008

குன்றக்குடி அடிகளாரும் பெரியார் விருதும் - திமுக காங்கிரஸ் மாதிரி சபையும்

நேற்று ஒரு அதிசயம் திருச்சியில் நடந்தது. குன்றக்குடி அடிகளார் விபூதி பூசி கொண்டு, ருத்ராட்ச மாலை அணிந்து பேசுகிறார் பகுத்தறிவும், கடவுள் மறுப்பு கொள்கையும் இன்னும் வளர வேண்டும் என்று.
அவர் சொல்கிறார் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை இன்னும் முழுழ்மை அடைய வில்லை அதை நாம் இன்னும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்கிறார்.
விழாவில் பேசிய வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் காதர் மொய்தீன் ,கருணாநிதி நீண்ட காலம் வாழ அல்லாஹ் அருள் புரியட்டும் என்கிறார்.
புழுகர் ஆர் எம் வீரப்பனோ தான் எப்போதும் கருணாநிதியுடன் கூடவே இருந்ததாக்சொல்கிறார்.
இதை விட கொடுமை காங்கிரசிருக்கு மந்திரி சபையில் இடம் வேண்டும் என்ற கோரிக்கை (உபயம் சிதம்பரம்).
அண்ணாதுரை மற்றும் நீதி கட்சி பிரமுகர்கள் கட்சி ஆரம்பித்ததே காங்கிரசை விரட்ட வேண்டும் மந்திரி சபையில் இருந்து என்பதற்காக. இன்று அண்ணாதுரை விழாவிலே நீதி கட்சி கொள்கை நீர்த்து போயிற்று போல.
பெரியார், அண்ணா கொள்கைகள் எல்லாம் நீர்த்து போயிற்றா.
அல்லது இதை சண் டிவியில் நேரலையில் பார்க்கும் நாம்தான் மூடர்களா.
அல்லது அரசியலில் இது எல்லாம் சாதாரணம் அப்பா (உபயம் கௌண்டமணி) என்று நாம் சிறிது விட்டு மறந்து விட வேண்டுமா.
அல்லது இதை விட அடுத்து அம்மா ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் இதே வீரமணி, தோல் திருமா, குமார், ஆர் எம் வீரப்பன் பேசும் புகழுரைகளும் கேட்டு ரசிக்க வேண்டுமா.

Friday, September 19, 2008

நளினியை விடுதலை செய்யலாமா - ராஜிவ் காந்தி படுகொலை

நளினியை விடுதலை செய்யலாமா - ராஜிவ் காந்தி படுகொலை
நளினி இன்றோடு பதினேழு வருடங்கள் சிறையில் இருந்து விட்டார். ஆயுள் தண்டனை (பதினான்கு ) வருடம் முடிந்து விட்டது. இன்னும் தமிழாக அரசு விடுதலை செய்ய தயங்குகிறது.
மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் .ஆனால் இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா.
(லீலாவதி கொலை யாளிகளை விடுதலை செய்து விட்டோம், ) கண்ணகி எரித்த மதுரை ஊரு நியாயமே தனி கதை ங்க. (அரசியல்லே இதெல்லாம் சகஜம் அப்பா)
நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வாருங்கள்.

நளினியை விடுதலை செய்யலாமா - ராஜிவ் காந்தி படுகொலை

நளினி இன்றோடு பதினேழு வருடங்கள் சிறையில் இருந்து விட்டார். ஆயுள் தண்டனை (பதினான்கு ) வருடம் முடிந்து விட்டது. இன்னும் தமிழாக அரசு விடுதலை செய்ய தயங்குகிறது.

மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் .ஆனால் இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா.
(லீலாவதி கொலை யாளிகளை விடுதலை செய்து விட்டோம், ) கண்ணகி எரித்த மதுரை ஊரு நியாயமே தனி கதை ங்க. (அரசியல்லே இதெல்லாம் சகஜம் அப்பா)

நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வாருங்கள்.

பெரியார் - கடவுள் எதிர்ப்பு அல்லது பார்ப்பனீய எதிர்ப்பு

பெரியார் - கடவுள் எதிர்ப்பு அல்லது பார்ப்பனீய எதிர்ப்பு
எனக்கு இந்த ஐயம் எப்போதும் உண்டு. பெரியாருக்கு இந்து மத கடவுள் ஆனா ,ராமர், பிள்ளையார் மட்டும் தான் புடிக்காதா அல்லது இஸ்லாம் கடவுள் ஆனா முகம்மது நபி , இயேசு கிறிஸ்து வும் புடிக்காத.
பெரியாரோ , கலைஞரோ, அனபழஅகனோ முகம்மது நபி , இயேசு கிறிஸ்து பற்றி கேலி, கிண்டல் பேசி நான் கேட்டது இல்லை, படித்து இல்லை,.
பெரியாரின் உண்மையான கொள்கை என்ன, கடவுள் எதிர்ப்பா அல்லது பார்ப்பனீய எதிர்ப்பா.

ஏதாவது கட்டுரை அல்லது புத்தகம் இருந்தால் தொடர்பு கொடுக்கவும்.

குறிப்பு: வீரமணி யை நான் பெரியாரி கொள்கை வாதி என்றே கொள்ள வில்லை. இன்று கலைஞர்களுக்கு விருது கொடுக்கும் அவர் நாளைக்கே அம்மா வின் காலில் விழுது ஆசி வாங்குவர் என்பது எல்லாரும் அறிந்தது.

Wednesday, September 10, 2008

கவுரவ டாக்டர் பட்டங்கள் -என்ன பயன்- சோனியா , மன்மோகன், கலைஞர்

சமீபத்தில் சென்னை பல்கலை கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழஅங்கியது. இதனால் யாருக்கு என்ன லாபம், (ஒரு வேலை அந்த கூடத்திற்கு ஏற்பாடு செய்த ஒலி அமைப்பாளர்,, உணவு , குடி தண்ணீர் வழாங்கிய வணிகர்க்கு சிறு லாபம் கிடைத்து இருக்கும்).

இதை தவிர்த்து பார்த்தால் மக்களின் (நமது) வரி பணம் எந்த அளவு விரயம் ஆகிறது. அதுவும் மின் தட்டுபாடு உள்ள இந்த கால கட்டத்தில் அத்தனை விளக்குகள், குளிரூட்ட பட்ட சாதனம், அத்தனை போக்குவரத்து செலவுகள், இன்ன பிற.

இனியாவது, பல்கலை கழஅகங்கள் இந்த கவுரவ டாக்டர் பட்ட கலாச்சாரங்களை நிறுத்தி கொள்ளுமா. குறைந்த பட்சம் அந்த விழாக்களை ஆவது எளிமையாக நடத்துமா.

Tuesday, September 2, 2008

டிவி ரியாலிட்டி ஷோ

தமிழக தொலைக்கட்சிகளில் தினமும் போட்டி மனப்பான்மையை வளர்க்கும் நிகழ்ச்சியே இப்போது ஒளிபரப்ப படுகிறது.
இது மிகவும் ஆபத்தான விஷயம். நாளைய தலைமுறைக்கு போட்டி மனப்பான்மை ஒன்றையே இந்த நிகழ்ச்சிகள் கற்று கொடுக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மகிழ்ச்சி காணும் மனப்பான்மையை கற்று கொடுப்போம் நமது குழஅந்தைகட்க்கு.

நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறவும்.
குப்பன்_யாஹூ

டிவி ரியாலிட்டி ஷோ

தமிழக தொலைக்கட்சிகளில் தினமும் போட்டி மனப்பான்மையை வளர்க்கும் நிகழ்ச்சியே இப்போது ஒளிபரப்ப படுகிறது.
இது மிகவும் ஆபத்தான விஷயம். நாளைய தலைமுறைக்கு போட்டி மனப்பான்மை ஒன்றையே இந்த நிகழ்ச்சிகள் கற்று கொடுக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மகிழ்ச்சி காணும் மனப்பான்மையை கற்று கொடுப்போம் நமது குழஅந்தைகட்க்கு.

நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறவும்.
குப்பன்_யாஹூ

டிவி ரியாலிட்டி ஷோ

Thursday, August 28, 2008

வனப்பேச்சி - தமிழச்சி தங்கப்பாண்டியன்


வனப்பேச்சி
சுருண்டிருக்கும் சர்ப்பமெனஅவசரம் புதைந்திருக்கும்இந்நகரத்தின் எந்த வீட்டில் குழஅந்தைக்கான ஒரு தூளிச் சேலையும்வயது முதிர்ந்தவளுக்கான சுருக்கு பையும் இருக்கிறதோஅங்குதான் விருந்தினளாக வருவேன் என்ற அடம் வனப் பேச்சிக்கு......நான் அழைத்துச் சென்ற அந்த வீட்டின் முன் திண்ணை இல்லை வெற்றிலை எச்சில் எப்படி துப்ப என்ற பிலா கணத்துடன்திரும்புகையில் வாசல் கூர்கா மட்டுமே பிடித்திருப்பதாக சொன்னாள்பீடிக்க்காகவும் காவலுக்க்காகவும்

இது வேறு வெயில்


சுடு சோறு கொதி கஞ்சிவெப்பம் பழாம் பொசுக்கியதே இல்லை ஊர் வெயில்.
டயட் கோக் குளிரூட்டப்பட்ட வீடுபோசுக்குவதுன்ன என்ன? எனக் கேட்கும் மகள்அக்ன்னியாச்து அசலூர் வாழ்க்கை.
இன்னும் பல அற்புதமான கவிதைகள். வாங்கி படியுங்கள்,
வெளியீடு: உயிர்ம்மை பதிப்பகம், சென்னை.

வ்வ்வ்.உயிர்ம்மை.com

Wednesday, August 27, 2008

எஞ்சோட்டுப் பெண் - தமிழச்சி தங்கபாண்டியன்

சமீபத்தில் நான் படித்த புத்தகம் (கவிதை தொகுப்பு) இது, மிக அருமை. வெளியீடு - மித்ரா ஆர்ட்ஸ் - 32 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை ,

என்னை மிகவும் தொந்தரவு செய்த கவிதைகள் சில:

தோல்வி

வேட்டை நாயின் வீர்யத்துடாண்டிரக்கபடுகின்ற்ர்பேனாசுகவீனமுற்று இருக்கின்ற முதியவளின்பலவீன முனகல்போல் மூடப்படுகின்றதுசமயங்களில்உணர்வின் கொதிநிளைக்கும் வார்த்தைஎனும் வடிகட்டிக்கும்இடையே வந்ண்டலேனக் கவிதை தங்கி விடுகிறபோது.

மெட்ராஸ் லைப்

சமையலில் இருந்து சகலமும்பரிமாறும் உறவுகள் அங்கேஅண்டை வீடுகளாயிருக்க
பெயர் கூட அறிந்து இராதஅயலார்கள் இங்கே அடுத்தடுத்தமுட்டைகளில் இருந்துவெளிப்பட்டு சோகையாய்முகமநிக்கின்றனர்.

பின் குறிப்பு - நான் காயத்ரி kku (தமிழ் விரிவுரையாளர்) தான் நன்றி சொல்ல vendum. அவர் பரிந்துரைத்த ஒரு புத்தகம் வாங்க சென்ற இடத்தில், இந்த புத்தகமும் கிடைத்தது.

Tuesday, August 26, 2008

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தா

பழைய அறிவுரை இது, எனக்கு இந்த அறிவுரை சரியானதா என்று எப்போதுமே ஒரு ஐயம்.

போதும் என்று இருந்து விட்டால் அது நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காதா. புதிய முய்ரசிகளே நாம் எடுக்க மாட்டோமே. இருப்பது போதும் என்று இருந்து விட்டால் உலகத்தில் எல்லா வகையான முன்னேற்றமும் தடை படுமே.

நண்பர்கள் எனக்கு புரிய வைக்கவும் தயவு செய்து.


குப்பன்_யாஹூ

Monday, August 25, 2008

வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை

bலோகர்ஸ் (Blogers) அனைவரும் தங்களுக்கு விருப்பமான பத்து அல்லது இருபது புக்ஸ் பெயர்களை எழுதி உதவி புரியவும்.
ஒவ்வொரு - (காடேகோரிஎஸ்) வகையிலும் விருப்பமான புத்தகங்களை எழுதலாம்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் புத்தகங்கள் லிஸ்ட் தனி தனியாக கூட எழுதலாம்.
சுஜாதா ஒருமுறை படிக்க வேண்டிய இருபது தமிழ் புத்தங்கங்கள் எழுதி இருந்தார், நான் தொலைத்து விட்டேன், கிடைத்தால் அதை எழுதுகிறேன்.


குப்பன்_யாஹூ