Thursday, March 5, 2009

பாசிசம்- விஜய் டி வி, சுஜாதா, ஸ்ரீநிவாசன், உன்னி கிருஷ்ணன்

பாசிசம்- விஜய் டி வி, சுஜாதா, ஸ்ரீநிவாசன், உன்னி கிருஷ்ணன்

விஜய் டி வி யில் airtel சூப்பர் சிங்கர் என்ற பெயரில் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி நடப்பது நாம் அறிந்ததே. அதில் இப்போது பத்து போட்டியாளர்கள் உள்ளனர்.

அதில் ரஞ்சித் என்ற போட்டியாளர் தன் பொறியியல் கல்லூரி படிப்பு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் பாதிக்க படுகிறது எனக் கூறி தாமாக விலகுவதாக அறிவித்தார்.

அவர் கடந்த ஒரு வருடங்களாக தன் படிப்பை, கல்லூரி வகுப்பை இந்த போட்டிக்காக தியாகம் செய்து உள்ளார். இதற்கு மேல் படிப்பை விட்டு கொடுக்க முடியாது என்ற நிலைமையில் ரஞ்சித் எடுத்து உள்ள முடிவு பாராட்டுக்கு உரியது.

படிப்புதான் இளம் வயதில் முக்கியம், பொழுது போக்குகள் பிற்பாடே.

அaனால் இந்த முடிவை ரஞ்சித் அறிவித்த உடன், நீதிபதிகளா உள்ள சுஜாதா, ஸ்ரீநிவாஸ், உன்னி கிருஷ்ணன் சொல்வது , ரஞ்சித் நீங்கள் பெரிய தப்பு செய்து விட்டீர்கள் , எங்களுக்கு ஒரு போட்டியாளர் குறைந்து விட்டாரே என்ற பெரிய வருத்தம். (ஒரு போட்டியாளர் குறைந்தால் , மூன்று வார நிகழ்ச்சி, விளம்பர வருமானம், இவர்களின் வருமானம் குறையும் என்ற சமூக அக்கறை).
ரஞ்சித் நீங்கள் முன்னரே தெரிவித்து இருக்கலாமே, நங்கள் வேறு ஒரு போட்டியலறை தேர்வு செய்து இருப்போமே என்று குமுறுகிறார்கள்.

இப்படிப்பட்ட பாசிச எண்ணங்கள் நம் வீடு வரவேற்பு அறையில் விதைக்க படுகிண்டறன. இதை பார்க்கும் மாணவர்கள் சிந்தனை போக்கு எவ்வாறு மாறும் என்ற சமூக கவலை இல்லை ஸ்ரீநிவசுக்கும், சுஜாதாவிர்க்கும்.

தன் வருமானம் பாதிக்குமே என்ற சுயலாப சிந்தனையோடு இயங்கும் இவர்களை புறக்கணிப்போம், இத்தகைய நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்போம். ஒரு வருடம் தங்களுக்காக தன் வாழ்வை தொலைத்த அந்த ரஞ்சித் மீது ஒரு சொட்டு பரிதாபம் கூட இல்லை.

படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து இப்போதாவது இந்த மாயை இல் இருந்து விலகிய ரஞ்சித்திற்கு எமது வாழ்த்துக்கள்.

டி வி யில் நடக்கும் இந்த மாதிரி மனிதாபினம் அற்ற நிகழ்ச்சிகளை கட்டுபடுத்த தணிக்கை கண்டிப்பாக அவசியம்.

இந்த மாதிரி சுய லாப சிந்தனைகள் விதைக்கப் பட்டாள் பல சத்யம் ராம லிங்க ராஜுக்கள் உருவாகுவார்கள்.