Saturday, January 24, 2009

ஆதவன் தீட்சன்யா புலம்பல் -சங்கமம்

ஆதவன் தீட்சன்யா புலம்பல் -சங்கமம்
ஆதவன் தீட்சண்யா ஜூனியர் விகடன்ல ஏன் இந்த புலம்பல் புலம்பி இருக்கார். சங்கமம் கவிதை விழாவில் (தியாகராய அரங்கம், டி நகரில்) சரியாக கவனிக்க வில்லை என்று.
அவரின் உண்மையான புலம்பலா அல்லது ஜூ வி யின் கற்பனை கதையா தெரிய வில்லை.

என் அனுபவத்தில் கனிமொழி அக்கா, தமிழ் மையம் போன்றோர் மிக சிறப்பான முறையிலயே சங்கமம் விழாவை நடத்தி இருந்தனர்.

எனக்கு என்னவோ இது வழக்கம் போல ஜூ வி யின் கற்பனை கதை என்றே தோன்றுகிறது, ஆதவன் இது போல கருத்து சொல்லி இருக்க மாட்டார் என நம்புகிறேன்.

குப்பன்_யாஹூ

Sunday, January 11, 2009

மான் ஆட மயில் ஆட = ரெக்கார்ட் டான்ஸ் - தமிழ் புத்தாண்டு காலை

மான் ஆட மயில் ஆட = ரெக்கார்ட் டான்ஸ் - தமிழ் புத்தாண்டு காலை

கிராமங்களில் ரெகார்ட் டான்ஸ் என்ற பெயரில் அரை குறை ஆடைகளுடன் ஆண் பெண் (அதில் கூட முப்பது வயதிற்கு மேற்பட்டோர்) ஆடுவர். அது சமூகத்தை சீர் கெடுக்கிறது என்று கூறி காவல் துறை அனுமதிக்காது, கைது செய்யும்.

இன்று அந்த ரெக்கார்ட் டான்ஸ் நம் வீட்டு வரவேற்பறை, படுக்கை அறை, படிப்பு அறைகளில், கலைஞர் டி வி மூலமாக ஒளி பரப்ப படுகிறது.

அதுவும் இப்போது போட்டியின் உச்ச கட்டத்தில் இளம் பெண்கள் ஆடைகளை துறக்கவோ, அவிழ்க்கவோ தயக்கமே இல்லாமல் இருக்கின்றனர்.

மாணவர்கள், பதின் வயது விடலைகள் இனிமேல் நயன் தாரா , நமீதா திரைப்படம் தேடி செல்ல வேண்டாம். அதை விட அதிகமாக உடலை, சதையை, உடல வளைவுகளை மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டு காலை பத்து மணிக்கு சிறப்பு ரெக்கார்ட் டான்ஸ் ஆம் மன்னிக்கவும் சிறப்பு மான் ஆட மயில் ஆட.

என் வருத்தம் பெரியாரும், அண்ணாவும் இல்லையே இந்த தம்பியின் கலாசார பேணி பார்க்கும் செயலை பார்க்க. அண்ணா பார்த்து இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்து இருப்பார்.

சில வாரங்களில் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் வேடம் இட்டு ஆடி ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்றனர் எனலாம்.

சில மாதங்களுக்கு முன்னர் கலைஞர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தணிக்கை செய்யும் உரிமையை மாநில அரசுக்கு வழாங்க வேண்டும் என்றார்.
இப்போதுதான் புரிகிறது கலைஞரின் தீர்க்க தரிசனம். இந்த மாதிரி ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சிகளை ஒரு வேலை தடை தணிக்கை செய்து விடுவார்களோ என்ற அச்சம் போல.

கண்டிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை தேவை.

கண்ணகி சிலை போன்ற செட் அமைத்து கண்ணகி முன்னாலேயே காமத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள் கலா குழுவினர்.

பயமாக உள்ளது அடுத்த தலைமுறை எப்படி வருமோ என்று.

குப்பன்_யாஹூ

Friday, January 9, 2009

முரண்பாடு = சாரு நிவேதிதா - இந்தியா டுடே கமல் சிறப்பு இதழ்

முரண்பாடு = சாரு நிவேதிதா - இந்தியா டுடே கமல் சிறப்பு இதழ்
இந்தியா டுடே தமிழ் பதிப்பு கமல் ஹாசன் குறித்த சிறப்பு இதழ் வெளியிட்டு உள்ளது.

அதில் சிறந்த கட்டுரைகள் உள்ளன - எஸ் ராமகிருஷ்ணன், யூகிசேது, ஜெயராம், மனுஷ்ய புத்திரன் , சந்தான பாரதி, நாசர், நிகில் முருகன்.

எல்லாரும் கமலிடம் வைக்கும் ஒரே வேண்டுகோள் உலக அளவிலான தமிழ் திரைப்படம் தொடர்ந்து தர வேண்டும் என்பதே.

சாரு நிவேதிதா தன் கட்டுரையில் கமலுக்கு உலக சினிமா விசயங்கள் நிறைய தெரியும் ஆனால் சிவாஜிக்கு உலக சினிமா மீது ஈடுபாடு இல்லை. எனவே தான் கமல் அளவு சிவாஜி உலக அரங்கில் பேசப் படவில்லை என்கிறார்.

உலக சினிமா தெரிந்த ஒரே உன்னத நடிகர் கமல் மட்டுமே என்று வாக்கியத்துக்கு வாக்கியம் புகழ்ந்து எழுதி உள்ளார்

இதே சாரு நிவேதிதா உயிர்மை இதழில் தசாவதாரம் விமர்சனம் கட்டுரையில் கமல் உலக சினிமாவை தமிழ் திரை உலகில் புகுத்த பார்கிறார். தசாவதாரம் ஒரு குப்பை சினிமா என்று எழுதி இருந்தார்.

அடுத்த மாதம் சுப்ரமணிய புரம் விமர்சனத்தில் சசிகுமார் உலக சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம், தெரிந்தால் கமல் மாத்ரி குழ்ம்பி விடுவார் என்று எழுதி உள்ளார்.

ஆறு மாதத்தில் ஏன் இந்த மாற்றம் சாரு நிவேதிதா.

சாரு கூறும் இன்னொரு விமர்சனம் கமல் இளம் , புதிய , பிரபலம் ஆகாத இயக்குனர்களுடன் சினிமா பண்ணுவது இல்லை என்று.

பிரளயன் உடன் அன்பே சிவம், பரதனை வலுக்கட்டாயாமாக தமிழுக்கு கொண்டு வந்து தேவர் மகன் செய்ய வைத்தது யார்., டி கே ராஜிவ்குமருடன் சாணக்யன் பண்ணியது யார்?
சங்கருடன் அந்நியன் செய்த போது சங்கர் மூன்று படங்களே முடித்து இருந்தார்.

கட்டுரையின் இறுதியில் சாரு நன்றாக பல்டி அடித்து உள்ளார். கமலிடம் மட்டுமே சொல்லும் உரிமை, சுதந்திரம் உண்டு , மற்ற நடிகர்களிடம் சொல்ல முடியாது என்று.

தேவர் சமூக மக்களுடன் நெருங்கி பழ்கியவன் என்ற முறையில் சொல்கிறேன் சாரு, என் பார்வையில் விருமாண்டி (சண்டியர்), தேவர் மகனில் இருந்த புழுதியின் தாக்கம், அருவா வீரம் பருத்தி வீரனில் இல்லை என்பதே உண்மை.
அதிலும் சண்டியரில் (விருமாண்டியில்) அந்த பொட்டி கடை காந்திமதி காட்சிகள் மிக இயல்பான காட்சி (அப்படியே நம் கண் முன்னே, போடி, தேனீ ஊர்களை கண் முன்னே கொண்டு வந்தனர்). சங்கிலி முருகனும், பாரதிராசாவும் அந்த காட்சி பார்த்தும் அழுது விட்டனராம்.
பருத்தி வீரனில் தேவர் படமா குறவர் படமா என்ற குழ்ப்பம் அமீரிடம் நிறையவே இருந்தது. தெரிந்தது.

நாங்களும் சாரு நிவேதிதா என்பதால் இந்த எதிர் விமர்சனத்தை எழுதுகிறோம், இதே அமிதாப் பச்சன் என்றால் எழுத மாட்டோம்.
குப்பன்_யாஹூ

Wednesday, January 7, 2009

சத்யம்- தணிக்கை யாளரும் கூட்டு

சத்யம்- தணிக்கை யாளரும் கூட்டு
சத்யம் நிறுவனத்தின் கால் ஆண்டு, ஆண்டு கணக்குகளில் தாராளமாக மோசடி நடந்து உள்ளதாம். ராமலிங்க ராசு ஒப்புக் கொண்டுள்ளார் இப்பொழுது.
இந்த கணக்குகளை பிரபல தணிக்கை நிறுவனம் ப்ப்ரைஸ் வாட்டர் ஹௌஸ் தணிக்கை செய்து, கணக்குகள் அனைத்தும் உண்மை, உண்மையை தவிர வேறு இல்லை (சத்தியம், சத்தியம், தவிர வேறு இல்லை) என்று சான்று அளித்து உள்ளது.
இந்த நிகழ்வு, ஒரு திருட்டு அல்லது தீவிரவாதத்திற்கு காவலர் துணை போவது போல.
எனவே பதிவர்களே அந்த தணிக்கை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்.
மேலும் விபரம் இங்கே காண்க.
http://www.caclubindia.com/forum/messages/2009/1/20528_1st_gtb_now_satyam.asp