Thursday, March 5, 2009

பாசிசம்- விஜய் டி வி, சுஜாதா, ஸ்ரீநிவாசன், உன்னி கிருஷ்ணன்

பாசிசம்- விஜய் டி வி, சுஜாதா, ஸ்ரீநிவாசன், உன்னி கிருஷ்ணன்

விஜய் டி வி யில் airtel சூப்பர் சிங்கர் என்ற பெயரில் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி நடப்பது நாம் அறிந்ததே. அதில் இப்போது பத்து போட்டியாளர்கள் உள்ளனர்.

அதில் ரஞ்சித் என்ற போட்டியாளர் தன் பொறியியல் கல்லூரி படிப்பு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் பாதிக்க படுகிறது எனக் கூறி தாமாக விலகுவதாக அறிவித்தார்.

அவர் கடந்த ஒரு வருடங்களாக தன் படிப்பை, கல்லூரி வகுப்பை இந்த போட்டிக்காக தியாகம் செய்து உள்ளார். இதற்கு மேல் படிப்பை விட்டு கொடுக்க முடியாது என்ற நிலைமையில் ரஞ்சித் எடுத்து உள்ள முடிவு பாராட்டுக்கு உரியது.

படிப்புதான் இளம் வயதில் முக்கியம், பொழுது போக்குகள் பிற்பாடே.

அaனால் இந்த முடிவை ரஞ்சித் அறிவித்த உடன், நீதிபதிகளா உள்ள சுஜாதா, ஸ்ரீநிவாஸ், உன்னி கிருஷ்ணன் சொல்வது , ரஞ்சித் நீங்கள் பெரிய தப்பு செய்து விட்டீர்கள் , எங்களுக்கு ஒரு போட்டியாளர் குறைந்து விட்டாரே என்ற பெரிய வருத்தம். (ஒரு போட்டியாளர் குறைந்தால் , மூன்று வார நிகழ்ச்சி, விளம்பர வருமானம், இவர்களின் வருமானம் குறையும் என்ற சமூக அக்கறை).
ரஞ்சித் நீங்கள் முன்னரே தெரிவித்து இருக்கலாமே, நங்கள் வேறு ஒரு போட்டியலறை தேர்வு செய்து இருப்போமே என்று குமுறுகிறார்கள்.

இப்படிப்பட்ட பாசிச எண்ணங்கள் நம் வீடு வரவேற்பு அறையில் விதைக்க படுகிண்டறன. இதை பார்க்கும் மாணவர்கள் சிந்தனை போக்கு எவ்வாறு மாறும் என்ற சமூக கவலை இல்லை ஸ்ரீநிவசுக்கும், சுஜாதாவிர்க்கும்.

தன் வருமானம் பாதிக்குமே என்ற சுயலாப சிந்தனையோடு இயங்கும் இவர்களை புறக்கணிப்போம், இத்தகைய நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்போம். ஒரு வருடம் தங்களுக்காக தன் வாழ்வை தொலைத்த அந்த ரஞ்சித் மீது ஒரு சொட்டு பரிதாபம் கூட இல்லை.

படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து இப்போதாவது இந்த மாயை இல் இருந்து விலகிய ரஞ்சித்திற்கு எமது வாழ்த்துக்கள்.

டி வி யில் நடக்கும் இந்த மாதிரி மனிதாபினம் அற்ற நிகழ்ச்சிகளை கட்டுபடுத்த தணிக்கை கண்டிப்பாக அவசியம்.

இந்த மாதிரி சுய லாப சிந்தனைகள் விதைக்கப் பட்டாள் பல சத்யம் ராம லிங்க ராஜுக்கள் உருவாகுவார்கள்.

19 comments:

Anonymous said...

The contestant name is Rohit.
He is studying in PSG Tech, Coimbatore.

Unknown said...

நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன்...எனக்கு அவர்கள் சொல்வது தவறென்று தெரியவில்லை....வேறொரு போட்டியாளரும் இந்த மாணவனும் சம நிலையில் இருந்த போது இந்த மாணவனை தேர்வுசெய்திருகிறார்கள்...அந்த மாணவன் அப்பொழுதே விலகிருந்தால் நாங்கள் அந்த போட்டியாளரை தேர்விசெய்திருப்போமே...அவன் வாய்ப்பும் போய்விட்டதே என்று தான் சொன்னார்கள்....அதனால் இதில் நீங்கள் உணர்ச்சிவசப்பட ஒரு மண்ணும் இல்லை....
இந்த பாசிசம் என்கிற வார்த்தையை எப்போது உபயோகப்படுத்தலாம் என்று யாராவது பதிவு எழுதினா தேவலை??????????? :))))))))))))))))
ஆ வூ ன்னா பாசிசம் னு சொல்றீங்க :)))))))))))))))))

அப்பறம் அந்த பையன் பேரு ரோஹித்...ரஞ்சித் இல்லை ...

குப்பன்.யாஹூ said...

நன்றி அனானிமஸ், கமல், அனானிமஸ்.

வருகை மற்றும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

அவர் பெயர் ரொஹித் மன்னிக்கவும் நான் ரஞ்சித் என்று எழுதி உள்ளேன்.

பாசிசம் என்று நான் சொல்ல வருவது, மனிதாபினம் அற்ற முறையில் பணம் போட்டி மட்டுமே குறிகோளாக கொண்டு செயல் படுவது.

ஒரு வருடம் தன் இளமை, வாழ்க்கை, நேரத்தை இந்த நிகழ்ச்சிக்காக செலவிட்ட அந்த இளைஞனுக்கு ஒரு நிமிடம் நன்றி கூட சொல்லாமல், நீ போனால் போய்க்கோ, வேறு ஒருவனை வைத்து நாங்கள் தொடருவோமே எங்கள் போட்டியை, என்று பன்னாட்டு லாப நோக்கு நிறுவனங்கள் பேசுவது போல பேசுவது வருத்தம் அளிக்கிறது.

பாரத நாட்டின் சிறப்பே மனிதாபினம், உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல் போன்றவை. அவை இல்லாமல் அடுத்த தலைமுறை வளருமோ என்ற கவலையே.

.

வலைபூக்களின் அரசன் said...

வேறொருவரை வைத்து போட்டி நடத்துவோம் என்றால், அப்போ திறமைக்கான போட்டி இல்லையா?

Vinitha said...

Still you watch the program?

Anonymous said...

-ஹலோ சார் உங்களுக்கு புறக்கணிப்பதை தவிர வேறு ஏதும் தெரியாதா?
துக்ளக் தினமலர் இந்துவை புறக்கணிப்போம்..இது இலங்கை பதிவுகளில்
அப்புறம் மாலன் பதிவுகளில் ஏதாயாச்சும் புறக்கணிப்போம்ன்னு சொல்லி கிட்டே போறீங்க

இப்போ விஜய் டிவியை புறக்கணிக்க போறீங்க
பார்த்து உங்களை எல்லாரும் புறக்கணிக்க போறாங்க

King... said...

சுஜாதாவுக்கும் உன்னி கிருஷ்ணனுக்கும் எங்க தெரியும் பாஸிசம்..?

ஆனாலும் ரங்சித் எடுத்த முடிவு பாராட்டுதலுக்குரியது... அவருக்கு இது இரண்டாவது துறையாக இருக்கையில்...

மேவி... said...

ya...
naanum unga katchi thaan

Tech Shankar said...

ரஞ்சித்திற்கு எமது வாழ்த்துக்கள்.

Tech Shankar said...

ரோஹித்.(!)

Anonymous said...

// ரஞ்சித் நீங்கள் பெரிய தப்பு செய்து விட்டீர்கள் , எங்களுக்கு ஒரு போட்டியாளர் குறைந்து விட்டாரே என்ற பெரிய வருத்தம். (ஒரு போட்டியாளர் குறைந்தால் , மூன்று வார நிகழ்ச்சி, விளம்பர வருமானம், இவர்களின் வருமானம் குறையும் என்ற சமூக அக்கறை).
ரஞ்சித் நீங்கள் முன்னரே தெரிவித்து இருக்கலாமே, நங்கள் வேறு ஒரு போட்டியலறை தேர்வு செய்து இருப்போமே என்று குமுறுகிறார்கள். //

They NEVER used such words like
" Rohith you did a big mistake, we have lost a person for competition, "

They told only, if you could have told us earlier, we could have selected the other person WHOSE SCORE IS VERY VERY NEARER TO YOU.

Sujatha, Srinivas and Unnikrishnan does not need to earn through Vijay TV or even if Rohith goes or some other person goes they neither going to earn or loss. The programme itself designed to eliminate one by one based on their talent. Rohith voluntarily went out. If he would have told earlier the some other person who is very near to his score could have been selected.

// ஒரு வருடம் தங்களுக்காக தன் வாழ்வை தொலைத்த அந்த ரஞ்சித் மீது ஒரு சொட்டு பரிதாபம் கூட இல்லை. //

செம்ம காமெடி ரோஹித் யாருக்காக வாழ்வை தொலைத்தார்? சுஜாதா, உன்னி கிருஷ்ணன், ஸ்ரீ நிவாஸ் போன்றவர்களுக்காகவா ? ரோஹித் தான் பின்னணி பாடகர் ஆக வேண்டும் என்றே ஒரு வருடம் உழைத்தார். அவர் ஒன்றும் வாழ்வை தொலைக்கவில்லை படிக்க போய் இருக்கிறார்.

The some other person who scored nearer to Rohith is also spent one year of his/her life right? If he/she sees that Rohith is voluntarily went out how it will be for her/him ?

They judges have many other options, already they are well to do families only. So they don't need to talk like that because of money only.

Apart from Sujatha, Srinivas, Unnikrishnan there is the director of the programme, editor of the programme, producer, Vijay TV. Apart from judging they will not have any role to play. Why you are blaming the judges alone. Blame the company which produces the programme, the director........

// ஒரு வருடம் தங்களுக்காக தன் வாழ்வை தொலைத்த அந்த ரஞ்சித் மீது ஒரு சொட்டு பரிதாபம் கூட இல்லை. //

Even if they have said something in favor of Rohith and if the editor of the programme has cut it for the sake of timing, how come we will know?

This is not a live program. That is shooted, edited, sound track added program. The shooting could have in different orders. If you have doubt go and see Miss. Chimnayi's Blog.

So simply blaming the judges is like, if you blame the achieved persons your blog will get lime light right?

காமராஜ் said...

வணக்கம் குப்பன் சார்.

இன்று அதிகாலைதான் உங்களின் அணைத்துப்பதிவுகளையும்
படித்தேன். நிகழ் அரசியலின், இலக்கிய அரசியலின் எல்லா
கூறுகளையும் சார்புத்தன்மையில்லாமல் அணுகுகிற உங்கள்
எழுத்து தெளிந்த நீர்போன்றது.

கடல் புறத்தில் நாவல் குறித்த உங்கள் அணுபவம் தான் எனக்கும்.
நான் ஒரு முறை உவரி மணப்பாடு போய் வந்தேன்.
இன்னும் எனக்கு கடலின் இரைச்சல் ஞாபகத்தில் வந்துகொண்டே
இருக்கிறது.

வாழ்வின் இயல்பினால் குண்டழுக்குப்படிந்த
கோட்பாடுகளைத்தூக்கி எரிகிற பிலோமிக்குட்டியை
எத்தனையோ பேர் நகலெடுக்க நினைத்து தோற்றுபோனார்கள்.
இது மோகமுள் அம்மாவந்தாள் போன்ற தி.ஜா வின் உன்னதங்களில்
முன்மொழியப் பட்டிருக்கும். சதவீதம் கொஞ்சம் குரைச்சலாக.

நிறைய நன்றிகள் தொடர்ந்து இதுபோன்ற பதிவுகள் தரணும்.

காமராஜ் said...

சார் இந்த அனானிகள்
ரொம்ப சுறு சுறுப்பானவங்க சார்.
அவர்கள் குறுக்கிடுகிற செய்திகள்,
வார்த்தைகள், பெயர்கள் எல்லாம்
பாருங்கள். நல்ல பற்று, யப்பா எவ்ளோ கோபம்.

Happy Smiles said...

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com

Tech Shankar said...

எனக்காக அந்த மாதிரியான கஷ்டப்படுபவர்களின் படங்களைத் தாருங்கள். நான் உங்களுக்கு நன்றி கார்டு போட்டு அந்தப் படங்களையும் போடுகிறேன். நன்றி.

please mail me that kind of photos to tamilnenjam@gmail.com

Thank you for your co-operation


//அபுதாபி, துபாயில் ஒரு அறையில் எட்டு அல்லது பத்து தமிழர்கள், இந்தியர்கள்; தங்கி ஒரே குளியல் அரை, கழிவு அரை பயன்[படுத்தும் படத்தை போடுங்கள்.

அதுதான் உண்மையான அக்கறை.

இப்படி நிங்களும் அந்த ஏமாற்று ஏஜென்ட்டுகள் மாத்ரி இருகதீர்கள், நம் தமிழ் நண்பர்களுக்கு த்ரோகம் செய்யாதீர்கள்.

ஒன்றே செய்வோம், நன்றே செய்வோம்.

குப்பன்_யாஹூ

Tech Shankar said...

அப்படித் துரோகம் செய்யும் எண்ணம் எனக்கில்லை அன்பரே. அப்படி நீங்கள் கருதாதீர்கள். என்னால் உங்கள் மனம் புண்பட்டிருப்பின் மன்னிக்கவும்.


//இப்படி நிங்களும் அந்த ஏமாற்று ஏஜென்ட்டுகள் மாத்ரி இருகதீர்கள், நம் தமிழ் நண்பர்களுக்கு த்ரோகம் செய்யாதீர்கள்.

Anonymous said...

kuppa un papaniya thimir puthi innum pogalaya... thimereduavanea...unakkum tamil nattriku vara yenna taguthi irukku...

Tech Shankar said...

முதலில் தமிழை ஒழுங்காக எழுதக் கற்றுக்கொள்ளவும். பிறகு அடுத்தவர் தவறைத் திருத்தவும்.


//இப்படி நிங்களும் அந்த ஏமாற்று ஏஜென்ட்டுகள் மாத்ரி இருகதீர்கள், நம் தமிழ் நண்பர்களுக்கு த்ரோகம் செய்யாதீர்கள்.

சுந்தர் said...

அண்ணே நிறைய எழுதுங்க, தங்கள் வருகைக்கு நன்றி