அமைச்சர் பூங்கோதை அருணா - தமிழக சத்யம் ராமலிங்கராசு
சமீபத்தில் மீண்டும் பூங்கோதை அருணாவை அமைச்சர் ஆக்கி உள்ளார் தமிழினத் தலைவர் கலைஞர். அதுவும் முக்கியமான துறையாம் தகவல் தொழில் நுட்பம்.
தி மு க வில் வேறு சட்ட மன்ற உறுப்பினர்களே இல்லையா, ஒருவேளை ஜாதிய அடிப்படை என்றால் கூட வேறு நாடார் உறுப்பினர்களே இல்லையா. பெண் ச ம உ என்றால் கூட சங்கரி நாராயணன் போன்ற மற்ற ச ம உ உள்ளனர்.
பூங்கோதை மீது ஆதாரத்துடன் ஊழல் குற்றம் (தன் உறவினருக்காக பதவியை தவறாக பயன்படுத்திய) உள்ள நிலையில் இப்போது இந்த பதவி நியமனம் தேவையா.
கருப்பசாமி பாண்டியனையோ அல்லது அப்பாவு (நாடார்) போன்றவர்களை நியமித்து இருக்கலாம்.
நாம் எல்லோரும் மதிப்பு வைத்து இருக்கும் கனிமொழி அக்கா இது பற்றி தலைவரிடம் சொல்லி இருக்கலாம்.
கலைஞர் ஏன் தடுமாறுகிறார் என்று தெரிய வில்லை.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ.
தமிழகத்திலும் கூடிய விரைவில் சத்யம் போன்ற நிகழ்வை எதிர் நோக்கலாம்.
வருத்தங்களுடன்
குப்பன்_யாஹூ
Showing posts with label நாடர். Show all posts
Showing posts with label நாடர். Show all posts
Friday, February 27, 2009
Subscribe to:
Posts (Atom)
