சன் டி வி, தினகரனால் தான் திமுக ஆட்சி - காமெடி
மாறன் சகோதரரக்ள் அறிக்கை, கடிதம் படித்தால் சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வராது. கலாநிதி சொல்கிறார், திமுக ஆட்சியே சண் டி வி , தினகரன் (பழைய கே பி கந்தசாமி அய்யா தினகரன் அல்ல) ஆகியவற்றால் தான் கிடைத்ததாம். ஆனால் கலைஞர்க்கு நன்றி கடன் இல்லையாம், தயாநிதி மாறனை பதவியை விட்டு தூக்கி விட்டாராம்.
திமுக வில் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத தயாநிதி மாறனுக்கு எம் பி தகுதி எங்கிருந்து வந்தது. கலைஞரின் பேரனாக இல்லாவிடில், ஒரு திமுக வட்ட பிரதிநிதி, தயாநிதிக்காக தேர்தலில் உழைதிருப்பாரா.
பொதுக்குழு, செயற்குழு, ஒன்றிய கழக தேர்தல் இது பற்றி எல்லாம் ஏதும் தெர்யுமா தயாநிதிக்கும், கலாநிதிக்கும்.
காலம் சென்ற முரசொலி மாறனுக்கே தெரியாதே அந்த அளவு. எத்தனை பொதுக்குழு கூட்டங்கள், மாநாடுகளில் மாறன் பேசும் பொது, உடன்பிறப்புகள் எந்த அளவு புலம்பி நொந்து போவார்கள் என்பது நாடு அறிந்த செய்தி.
கலைஞரின் உறவினர் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்தே முரசொலி மாறனுக்கு மந்திரி பதவி தரப் பட்டது, (விடுதலை விரும்பி, வைகோ, முகமது சகி, எல் கணேசன், குப்புசாமி, மிசா கணேசன், போன்றோர் எல்லாம் இருந்த போதும்)
உண்மையாக கட்சிக்கு உழைத்த தொண்டர்களை விட்டு விட்டு, உறவை பார்த்து பதவி வழஅங்கியது கலைஞர் செய்த மிகப் பெரிய தப்பு, அதற்கான தண்டனை இப்போது கிடைத்து விட்டது.
இங்கே பேராசிரியரின் அனுபவத்தை, பண்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும், அவர்தான் கலைஞரிடம் சொன்னாரம், ஏதோ சின்ன பசங்க,செங்கல்பட்ட தாண்டி தமிழ்நாடுன்னா என்ன என்று தெரியாத பசங்க, பாவம் விட்ருங்க.
Showing posts with label திராவிடம். Show all posts
Showing posts with label திராவிடம். Show all posts
Saturday, November 22, 2008
Subscribe to:
Posts (Atom)
