Saturday, May 16, 2009

தேர்தல்- ஓர்குட், வலைபதிவு - மக்களிடம் பாதிப்பு ஏற்படுத்த முடிய வில்லை

ஆர்குட், வலைபதிவுகள், சாட் அறைகள் என எல்லா இடங்களிலும் காங்கிரஸ் திமுக கூட்டணியை தோற்கடிக்க எழுத்து வடிவில் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. ஆனால் நிஜ வாழ்வில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று உள்ளது. எனவே ஆர்குட், பதிவுலகம் அந்த அளவு பாதிப்பு ஏற்படுத்த முடிய வில்லை என்பது புரிகிறது. ஒரு காரணம் இணயம் பயன்படுத்தும் பெரும்பாலான தமிழர்கள் வெளி நாட்டில் வசிப்பது (தொண்ணூறு சத விகிதம்). அதிமுக கூட்டணியை தான் குறை சொல்ல வேண்டும், இந்திய பிரச்சனைகளான ஸ்பெக்ட்ரம் ஊழல், அணு ஆயுத ஒப்பந்தம், மின் வெட்டு, தீவிரவாதம் இவற்றை மக்களிடம் எடுத்து செல்லாமல் இலங்கை தமிழ் ஈழம் மட்டுமே பிரதானம் என்று இருந்தது. வலைப் பதிவுகள் எல்லா மக்களிடமும் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்

7 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உங்களது கருத்து உண்மையே...

இளைய சமுதாயம் எதிர்பார்த்த "49ஓ" செயல்பாட்டில் வராமல் போனது அவர்களுக்கு ஏமாற்றமே!!

இதோ எனது அலசலையும் படித்து பாருங்கள்...

ஆதவா said...

தி.மு.க கூட்டணிக்கு வாழ்த்துகள்!!!

அ.தி.மு.க - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

தே.மு.தி.க - ???!!@@!

பா.ம.க - பாவம்!!! ஆனா இது தேவைதான்.

ஆ.ஞானசேகரன் said...

உண்மைதான் நண்பா,
என்னை பொருத்தவரை இந்த தேர்தலின் முடிவில் மக்கள் மதசார்பின்மையும், கலவரமில்லா நிலையும் எதிர்ப்பார்ப்பதாக தெரிகின்றது. அதேபோல் ஈழத்தமிழர்களுக்காக வேதனைப்படும் மக்கள் அதற்காக இங்கே ஒரு கலவரநிலையும், அரசியல் நாடகத்தையும் எதிர்கொள்ள விருப்பம் இல்லை என்றே தோன்றுகின்றது.. இது ஒரு சாமானியனின் கருத்து

Arunmozhi said...

வணக்கம் நான் அருண்மொழி. உங்கள் கருத்து உண்மை தான். against நிறைய மெயில் நிறைய வெப்சைட் ஆனா ஒட்டு போடவுங்க கம்மி பணம் படை பலம் இருக்கு தமிழ்நாடு ல சிவகங்கை தொகுதில கண்குடா தெருஞ்சும் யார்னாலும் ஒனும் பண்ண முடியலை அடுத்த தலை முறைகளா மருதனு பாப்போம்

Suresh said...

உங்கள் கருத்து மிக சரியான உண்மை, நம்மல மாதிரி படிச்சவ்ங்க எல்லாம் அவ்வளவா ஓட்டு போடுறாது இல்லை

நேசமித்ரன் said...

நிதர்சனத்தை தெளிவாக சொல்லி இருகிறீர்கள் ..

Anonymous said...

What do you think of this post-modern piece?

http://www.tamilhindu.com/2009/07/facts-amidst-gospels/